சனி, 22 ஜனவரி, 2022

இட்லி , தோசை மாவு சரியான பதத்தில் அரைப்பது

 தேவையான பொருட்கள் : 


👉 1 கிலோ பச்சரிசி

👉 1 கிலோ புழுங்கல் அரிசி

👉 1/2 கிலோ உளுந்து

👉 1/2 tsp வெந்தயம்

👉 உப்பு தேவையான அளவு


செய்முறை : 

💧  பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து மூன்றும் சுத்தம் செய்து (கழுவி) குறைந்தது ஒரு மணி நேரம் வரை ஊற வைத்து பின் வடிகட்டி அரைக்க வேண்டும்.

💧  அரைக்கும்போது வெந்தயம் மற்றும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும் அதிகமாக சேர்த்து கொள்ள கூடாது. 

💧 அரிசி அரைத்து எடுப்பதற்க்கு முன்பாக கையில் தொட்டு பார்க்கும்போது (ரவையை அரைத்தால் சிறிதாகி இருக்கும் அளவில் மாவின் பதம் இருக்க வேண்டும்) 

💧 அரிசி அரைத்து முடித்ததும் உளுந்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

💧 பின் ஒரே பாத்திரத்தில் அரிசி மாவையும் உளுந்து மாவையும் ஊற்றி மிக்ஸ் செய்து வைக்க வேண்டும். 

💧 இந்த மாவு நான்கு முதல் ஆறு மணி நேரத்திர்க்கு பிறகு பயன்படுத்த  தயாரானது.

💧 வீட்டிற்க்கு பயன்படுத்தும் மாவு என்றால் அரைக்கும் போது உப்பு சேர்த்து அரைக்க கூடாது. நீங்கள் மாவை பயன்படுத்தும் போது தேவையான அளவு உப்பு சேர்த்தால் போதுமானது. 

💧 கடைகளில், ஹோட்டல், ஹாஸ்டல் போன்று வியாபாரத்திற்க்கு பயன்படுத்தும் மாவாக இருந்தால் அரைக்கும் போதே உப்பு சேர்த்து அரைத்து 5 மணி நேரத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.


குறிப்பு : மாவில் உப்பு சேர்த்தால் சீக்கிரத்தில் உப்பி புளித்துவிடும்.