தேவையான பொருட்கள்:
1----- கோழிக் கறி 1/2 கிலோ
2----- மிளகாய்த்தூள் 50 கிராம்
3----- மல்லித்தூள் 2 கரண்டி மிளகுத்தூள் 1/2 கரண்டி
4----- சீரகத்தூள் 2 கரண்டி
5----- நல்லெண்ணெய் 100 கிராம்
6----- வெங்காயம் 50 கிராம்
7----- தேங்காய்ப் பால் அரை மூடி
8----- மஞ்சள்தூள் சிறிதளவு
9----- கொத்தமல்லி இலை சிறிது
10----- தண்ணீர் உங்கள் தேவைக்கேற்ப்ப
11----- உப்பு தேவையான அளவு
செய்முறை :
🕐 கோழிக் கறியை சுத்தம் செய்து சிறிய துண்டாக வெட்டி கொள்ள வேண்டும்.
🕑கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி அதனுடன் கோழிக்கறியையும் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
🕒இதில் சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது கிளறி மூடி வைத்து சிறு தீயில் சிறிது நேரம் வேகவிடவும்.
🕓பின் திறந்து கறியில் தண்ணீர் விட்டு வேகவைத்துக் கொள்ளவும்.
🕔பின் மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து கிளரி தேங்காய்ப் பாலையும் கறியிலேயே ஊற்றி அதனுடன் சிறிது எண்ணெய் விட்டு வேக வைக்கவும்.
🕕கறிவெந்து குழம்பு வற்றி மேலே எண்ணெய் தெளியவும் வந்த பின் கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறலாம்.