தேவையான பொருட்கள்:
1----- சிக்கன் 250 கிராம்
2----- அடை மாவு 500 கிராம்
3----- மஞ்சள்தூள் 1/2 tsp
4----- மிளகுத்தூள் 1/2 tsp
5----- வெங்காயம் - 2
6----- பூண்டு 10பல் சிறிதாக நருக்கியது
7----- இஞ்சி மற்றும் தயிர் சிறிதளவு
8----- பச்சைமிளகாய் தேவைக்கேற்ப
9----- உப்பு தேவையான அளவு
செய்முறை:
கோழிக் கறியை எலும்பு இல்லாமல் சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்,
அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்து சிறிது தயிர் ஊற்றி குறைந்தது அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்,
பின் அடை மாவை தண்ணீரில் கலந்து அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் போட்டு
அதனுடன் ஊறவைத்திருந்த கோழிக்கறியையும் கலக்க வேண்டும்,
அதன் பிறகு தோசை கல்லில் ஊத்தாப்பம் போன்று ஊற்றி அதை சுற்றி எண்ணெய் விட்டு சுட்டு எடுக்க வேண்டும்,
சுவையான சிக்கன் அடை தயார்.